2 பாய்ன்ட் O திரைப்படம், சவுண்ட் தொழில்நுட்பத்தில் 4-Dயில் எடுக்கப்பட்ட
படம் என்று இயக்குனர் ஷங்கர், இசை வெளியீட்டின் போது அறிவித்தார். ஆனால்,
படத்தை திரையிட ஏற்றவாறு 4D சவுண்ட் தொழில்நுட்பத்தில் திரையரங்குகள்
எதுவும் இல்லை. திரையரங்குகளை 4D சவுண்ட் தொழில்நுட்பத்துக்கு மாற்றினால்
தான் 2.O படத்தை நிஜ உலகில் பார்ப்பது போன்று இருக்கும். இந்நிலையில்,
சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 3 திரையரங்குகள் 4D சவுண்ட் தியேட்டர்களாக
மாற்றப்பட்டுள்ளது. மேலும், டிக்கெட் புக்கிங் துவங்கியதுமே இருக்கைகள்
அனைத்தும் விறுவிறுவென முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து
திரையரங்குகளிலும் காலை, மதியம், மாலை, இரவு என அனைத்து காட்சிகளும் 'ஹவுஸ்
ஃபுல்' ஆகியுள்ளன.