Wednesday 27 March 2013

அஜீத்தின் தியாக உணர்வு


சமீபகாலமாக நடிகர் அஜீத்தை குறித்தும் அவரது எதிர்கால படங்களை குறித்தும் பல்வேறு யூகங்கள் பரபரப்பாக ஊடங்கங்களில்விவாதிக்கப்படுகிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தின் படபிடிப்பில் கார் சேசிங் காட்சியில் ஏற்பட்ட விபத்தின் விளைவாக அஜீத்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதற்கான மருத்துவ ஆலோசனைக்கு சென்ற போது அறுவை சிகிச்சை தான் நிரந்தர தீர்வு என்று கூறப்பட்டதால் வருகிற அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி அஜீத்துக்கு அறுவை சிகிச்சைக்கு நடக்க இருக்கிறது. அது வரையில் புதிய படத்துக்கான எந்த ஒரு முடிவையும் எடுக்கப்போவதிலை என தீர்மானித்து இருக்கிறார்.
அறுவை சிகிச்சைக்கான கால தாமதம் ஏன் என்று விசாரித்தபோது நம்மை வியக்க வைத்தார் அஜீத். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் நீண்ட இடைவேளைக்கு பிறகு தயாரிக்கும் இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா , ராணா , நயன்தாரா, டாப்சீ, கிஷோர், அத்துல் குல்கர்னி, மகேஷ் மஞ்ச்ரேகர், சுமா ரங்கநாத் என்ற பல்வேறு நட்சத்திர கூட்டம் நடித்து வருகின்றனர்.
தன்னுடைய சிகிச்சையினால் இவர்களின் தேதியும் வீணாகும் என கருதிய அஜீத் தன் சிகிச்சை காலத்தை ஒத்தி வைத்துள்ளார் அஜீத்.
இதை தொடர்ந்து தான் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி விஜயா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் படத்தில் நடிக்க உள்ளார். தான் பெரிதாக மதிக்கும் மறைந்த திரு நாகி ரெட்டியாரின் நூற்றாண்டை ஒட்டி ஒப்பந்தமான படம் என்பதாலும் இப்படத்திலும் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் சிலர் இருப்பதால் அவர்களின் கால்ஷீட் வீணாக கூடாது என்று கருதி இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் அறுவை சிகிச்சை என்று முடிவு செய்திருக்கிறார் அஜீத். வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்க உள்ளது.
சக நடிகர்களின் வளர்ச்சிக்காக தன் உடல்வலியையும் பொறுத்துக்கொண்டு நடிக்கும் அஜீத்தின் தியாக உணர்வு திரையுலகில் சக நடிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

0 கருத்துக்கள்:

Post a Comment